பினாங்கிலுள்ள கல்லறை பகுதியில் நிர்வாணமாக ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் வைரலான வீடியோவில் காணப்பட்ட தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 மற்றும் 50 வயதுடைய அந்த ஆடவரும், பெண் ஒருவரும், ஜார்ஜ் டவுன் பகுதியில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் கணவன் மனைவி அல்ல என்பது தெரியவந்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கல்லறை பகுதியில் நிர்வாணமாக ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அத்தம்பதி தொடர்பான காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து போலீசார் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவமானது குற்றவியல் சட்டம் 294 மற்றும் 509 பிரிவுகளின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அசிஸி தெரிவித்துள்ளார்.








