கோலாலம்பூர், மார்ச்.06-
புக்கிட் அமான், ஒருமைப்பாடு மற்றும் தரநிலை இணக்கப் பிரிவான ஜிம்ஸின் (JIPS) இயக்குநராக அய்டா அப்துல் ஹாமிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, மத்திய போலீஸ் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையில் துணை இயக்குநராக அய்டா பணியாற்றி வந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜிப்ஸ் இயக்குநராக நியமிக்கப்பட்ட முன்னாள் பினாங்கு போலீஸ் தலைவர் ஹம்ஸா அஹ்மாட்டுக்கு பதிலாக அய்டா பதவியேற்றுள்ளார்.
இதனிடையே, அய்டாவின் முந்தைய பதவியில் அவருக்குப் பதிலாக சுர்யாணி சுங்கிட் நியமிக்கப்படுவார் என்று புக்கிட் அமான் அறிவித்துள்ளது.
சுர்யாணி இதற்கு முன்பு ஜிப்ஸ் தரநிலை இணக்கப் பிரிவில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








