Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விசாரணை அறிக்கை, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும்

Share:

புத்ராஜெயா, மார்ச்.03-

20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் மலேசிய கினி நிருபர், B. நந்தக்குமார் சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கை, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஷா ஆலாமில் உள்ள ஒரு ஹோட்டலில் பிடிபட்ட நந்தகுமார், 2009 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு சட்டம் 16 A பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் கடத்தும் கும்பல் குறித்து அந்த நிருபர், செய்தியை வெளியிட்டு இருந்தாலும், அந்த செய்திக்கும், சம்பந்தப்பட்ட நபரின் கைதுக்கும் தொடர்பு இல்லை. இது முழுக்க முழுக்க லஞ்சப்பணம் சம்பந்தப்பட்ட வழக்காகும் என்று இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஸாம் பாக்கி விளக்கினார்.

அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் கடத்தும் கும்பல் குறித்து செய்தி வெளியிடாமல் இருக்க லஞ்சம் கேட்டு, அந்த நிருபர் வற்புறுத்தியதாக புகார்தாரர் தனது புகாரில் குறிப்பிட்டு இருப்பதையும் அஸாம் பாக்கி சுட்டிக் காட்டினார்.

Related News

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்