கோலாலம்பூர், ஏப்ரல்.29-
நாட்டில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் கவலைக்குரிய வகையில் அதிகரித்து வருவதாக மகளிர் , குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகப் பதிவாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான மோதல்கள் மற்றும் வன்முறைகள் ஓர் உயர்வான போக்கைக் காட்டுவதாக அவர் சுட்டிக் காட்டினார். குறிப்பாக, நிதி நெருக்கடிகள், போதைப் பொருள் பயன்பாடு மற்றும் மன அழுத்தம் போன்றவை இத்தகைய வன்முறைகளுக்கு முக்கியக் காரணங்களாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அமைதி காக்காமல், உடனடியாகத் தாலியான் காசே (Talian Kasih) 15999 என்ற அவசர எண்ணிற்கு அழைத்து உதவி கோருமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.








