Dec 13, 2025
Thisaigal NewsYouTube
தடுப்புக் காவலில் கைதி மரணம்: விசாரணை செய்யாதது ஏன்?
தற்போதைய செய்திகள்

தடுப்புக் காவலில் கைதி மரணம்: விசாரணை செய்யாதது ஏன்?

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.13-

கடந்த பிப்ரவரி மாதம் பண்டார் சன்வே போலீஸ் நிலையத் தடுப்புக் காவலில் தனது கணவர் மணிசேகரன் மோகன் மரணம் அடைந்தது தொடர்பில் தங்களிடம் இதுவரை எந்தவொரு விசாரணையும் நடத்தப்படாதது குறித்து அவரின் மனைவி எஸ். ராஜேஸ்வரி ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தடுப்புக் காவல் மரணம் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்று புக்கிட் அமான் போலீஸ் புலனாய்வுப் பிரிவிற்கு சட்டத்துறை அலுவலகம் உத்தரவிட்ட போதிலும் , தம்மிடமோ அல்லது தமது குடும்ப உறுப்பினரிடமோ போலீஸ் துறை இதுவரை எந்தவொரு விசாரணையும் நடத்தாதது குறித்து ராஜேஸ்வரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டத்துறை அலுவலகம் உத்தரவிட்டு ஏழு நாட்கள் கடந்தும் போலீஸ் தரப்பில் எந்தவொரு தகவலும் பெற முடியவில்லை என்று ராஜேஸ்வரி தனது ஏமாற்றத்தைப் பதிவுச் செய்துள்ளார்.

போலீசாரின் நடவடிக்கை ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்புக் காவலில் தனது கணவர் இறந்தது குறித்து மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சட்டத் துறை அலவலகம் உத்தரவிட்டு இருப்பதையும் ராஜேஸ்வரி சுட்டிக் காட்டினார்.

41 வயது மணிசேகரன், இவ்வாண்டு முற்பகுதியில் பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வே போலீஸ் தடுப்புக் காவலில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று ராஜேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.

Related News

டிரைலர் லோரி ஹெலிகாப்டரை ஏற்றி வந்த சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது

டிரைலர் லோரி ஹெலிகாப்டரை ஏற்றி வந்த சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது

பினாங்கு பாலத்தில் பாதுகாப்புப் பணிகள் மேம்படுத்தப்பட வேண்டும்

பினாங்கு பாலத்தில் பாதுகாப்புப் பணிகள் மேம்படுத்தப்பட வேண்டும்

அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: குண்டர் கும்பலின் பழிவாங்கும் செயலே

அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: குண்டர் கும்பலின் பழிவாங்கும் செயலே

ஜோகூர் பாருவில் சுயமாக இயங்கும் இலவச பேருந்து

ஜோகூர் பாருவில் சுயமாக இயங்கும் இலவச பேருந்து

யுஇசி கல்விச் சான்றிதழை அங்கீகரிப்பதில் பிரதமர்  துணிந்து முடிவு எடுக்க வேண்டும்: களத்தில் குதித்தது சீனக் கல்வி அமைப்பான டோங் ஸோங்

யுஇசி கல்விச் சான்றிதழை அங்கீகரிப்பதில் பிரதமர் துணிந்து முடிவு எடுக்க வேண்டும்: களத்தில் குதித்தது சீனக் கல்வி அமைப்பான டோங் ஸோங்

இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025 வரவேற்கத்தக்கது: ஆனால் தனியுரிமை பாதிக்கப்படலாம் - சமூக ஆர்வலர் லீ லிம் தை கருத்து

இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025 வரவேற்கத்தக்கது: ஆனால் தனியுரிமை பாதிக்கப்படலாம் - சமூக ஆர்வலர் லீ லிம் தை கருத்து