அனுமதியின்றி மின் வர்த்தக முறை வாயிலாக பகாங் மாநிலத்தின் உயரிய விருதுகளுக்கான பதக்கங்கள் மற்றும் சின்னங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுவது தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையை திறந்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ யாயா ஓத்மான் தெரிவித்துள்ளார். இந்த மின் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினர் மற்றும் பதக்கங்களை விற்பவர், வாங்குபவர் குறித்து தற்போது போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக யாயா ஓத்மான் குறிப்பிட்டார்.
பகாங் மாநில உயரிய விருதுக்கான பதக்கங்கள் மற்றும் சின்னங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கடந்த ஜுலை 11 ஆம் தேதி பெக்கான் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் உயரிய விருதுக்கான பதக்கங்கள் விற்பனை செய்யப்படுவது 2017 ஆம் ஆண்டு பகாங் விருதளிப்பு சட்டத்திற்கு முரணானதாகும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


