பெட்டாலிங் ஜெயா, ஜூலை 15
அரசாங்க ஊழியர்களுக்கு பொதுச் சேவைத்துறையின் புதிய சம்பள முறை தொடர்பான விபரங்கள் வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது.
வரும் ஆகஸ்ட 16 ஆம் தேதி புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கும் அரசு ஊழியர்களுக்கான முதன்மை கூட்டத்தில் புதிய சம்பள முறை தொடர்பான விபரங்கள் வெளியிடப்படும் என்று பொதுச் சேவைத்துறை தனது எக்ஸ் ( X ) தள பதிவில் குறிப்பிட்டுள்ளது.
அர்ப்பணிப்பும், வேலைத் தரமும் கொண்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அவர்களின் அடைவு நிலைக்கு ஏற்ப சம்பள உயர்வு கணக்கிடப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.








