May 21, 2026
Thisaigal NewsYouTube
ஐந்து அமைச்சர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
தற்போதைய செய்திகள்

ஐந்து அமைச்சர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

Share:

அமைச்சரவை மாற்றத்தில் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐவர், இன்று பிற்பகல் 3 மணியளவில் இஸ்தானா நெகாராவில் மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரி அயாத்துடின் அல் முஸ்தஃபா பிலா ஷா முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

அத்துடன் ஐந்து புதிய அமைச்சர்களும் விசுவாச உறுதி மொழி மற்றும் ரகசிய காப்புப் பத்திரத்திலும் கையெழுத்திட்டனர்.

இலக்கவியல் அமைச்சர் கோபின் சிங் டியொ, சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் டிசுல்கிஃப்லி அஹ்மாட் மனித வள அமைச்சர் ஸ்தீவென் சிம் சீ, தோட்டம், மூலத் தொழில் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி மற்றும் இரண்டாவது நிதி அமைச்சர் செனாட்டோர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் ஆகியோரே அந்த ஐவர் ஆவார்.

தவிர, துணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள இதர ஐவரும் மாமன்னர் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

பிரதமர் துறையில் சட்ட சீரமைப்பு துணை அமைச்சர் எம். குலசேகரன், தொழில்முனைவர்கள், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஆர். ரமணன், மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நொராய்னி அஹ்மாட், துணை கல்வி அமைச்சர் வொங் கா வோ மற்றும் பிரதமர் துறையின் சமய விவகாரப்பிரிவு துணை அமைச்சர் செனட்டோர் டாக்டர் சுல்கிஃப்லி ஹாஸ்ஸான் ஆகியோரே அந்த ஐவர் ஆவர்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை