சிரம்பான், பிப்.19-
புனித ரமலான் மாதத்தில் ஒவ்வொது வெள்ளிக்கிழமையும் அரசாங்க ஊழியர்களுக்கு பிற்பகல் 12.30 மணிக்கு வேலை முடிவுறும் என்று பகாங் மாநில அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம், வெள்ளிக்கிழமையன்று பெண் ஊழியர்களுக்கு மட்டும் பிற்பகல் 2 மணிக்கு வேலை முடிவுறும் என்று அறிவித்துள்ளது.
எனினும் இந்த உத்தரவு மாநில அரசாங்கத்தின் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மட்டும் பொருந்துமே தவிர கூட்டரசு அரசாங்கப் பணியாளர்களுக்கு அல்ல என்ற நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ தெளிவுபடுத்தியுள்ளார்.







