Jul 4, 2026
Thisaigal NewsYouTube
சட்டப் பாதுகாப்பு தேவையில்லை என்கிறார் துன் மகாதீர்
தற்போதைய செய்திகள்

சட்டப் பாதுகாப்பு தேவையில்லை என்கிறார் துன் மகாதீர்

Share:

கோலாலம்பூர், ஜூலை.23-

ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பூலாவ் பத்து பூத்தே தீவு விவகாரத்தில் தாம் குற்றம் இழைத்து இருப்பதாக அரசாங்கம் கருதுமானால் தம்மைத் தாராளமாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டலாம் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று சவால் விடுத்துள்ளார்.

நாட்டின் முன்னாள் பிரதமர் என்ற முறையில் தமக்குச் சட்டப் பாதுகாப்பு தேவையில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

சட்டப் பாதுகாப்பு என்பது, தாங்கள் குற்றம் இழைத்து இருப்பதை உணர்ந்து, நீதிமன்றத்திற்குச் செல்ல பயப்படுகின்றவர்களுக்கு மட்டுமே தேவைப்படுமே தவிர அது தமக்குத் தேவைப்படாது என்று துன் மகாதீர் கிண்டல் தொனியில் கூறினார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஓர் அரசு தரப்பு வழக்கறிஞரைப் போலவும், ஒரு நீதிபதியைப் போலவும் செயல்பட்டதாக துன் மகாதீர் குற்றஞ்சாட்டினார்.

பத்து பூத்தே தீவு விவகாரத்தில் தாம் ஒரு குற்றவாளி என்று அன்வார் தீர்ப்பளித்து இருப்பதாக துன் மகாதீர் கூறினார்.

எனினும் தாம் ஒரு குற்றவாளியாகக் கருதப்பட்டாலும் தமது வயது காரணமாக தம் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அன்வார் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்து இருப்பதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது