Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சிறைச்சாலை கைதிகளை வீட்டுக்காவலில் வைக்கும் நடைமுறை  தவறாக பயன்படுத்தப்படலாம் எச்சரிக்கிறது அரசு சாரா இயக்கம்
தற்போதைய செய்திகள்

சிறைச்சாலை கைதிகளை வீட்டுக்காவலில் வைக்கும் நடைமுறை தவறாக பயன்படுத்தப்படலாம் எச்சரிக்கிறது அரசு சாரா இயக்கம்

Share:

ஈப்போ, மார்ச் 4 -

நான்கு வருடங்கள் அல்லது அதற்கும் குறைந்த தண்டனை காலத்தை கொண்டுள்ள நன்னடத்தை மிக்க கைதிகளை சிறைச்சாலையில் தொடர்ந்து வைப்பதைவிட அவர்களை வீட்டுக்காவலில் வைக்கும் அரசாஙகத்தின் உத்தேசப் பரிந்துரை தவறாக பயன்படுத்தப்படக்கூடும் என்று அரச சாரா இயக்கம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது சிறைச்சாலையில் தனது தண்டனை காலத்தை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் போன்றவர்களை சிறைச்சாலையிலிருந்து விடுவித்து, வீட்டுக் காவலில் வைப்ப்பதற்கு இந்த உத்தேச நடைமுறை தவறாக பயன்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாக ப்ரோஜேக் சாமா என்ற மலேசிய நிலைத்தன்மை அமைப்பு நினைவுறுத்தியுள்ளது.

சிறைச்சாலை என்பது குற்றவாளிகளை அடைத்து வைக்கும் இடம் மட்டுமல்ல. தாங்கள் செய்த தவற்றுக்காக ஒவ்வொரு கைதியும் வருந்தியாக வேண்டும், குற்ற உணர்விலிருந்து திருத்தியாக வேண்டும், அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்திட வேண்டும் என்பதுதான் சிறைச்சாலையின் உன்னத நோக்கமாகும்.

குறைந்த பட்ச வசதிகளை அனுபவித்து வரும் கைதி ஒருவருக்கு, வீட்டுக்காவலில் வைப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்குமானால், தான் புரிந்த குற்றத்தின் கடுமையை உணர்வதற்கான வாய்ப்புகள் குறைந்து விடும். யார் வேண்டுமானாலும் சிறைச்சாலையிலிருந்து வீட்டுக்காவலில் வைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு விடும். இது 1ம்.டி.பி நிதியில் முறைகேடும், லஞ்ச ஊழலும் புரிந்த முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கும் இந்த சலுகை காட்டப்பட்டு விடலாம்.

அரசாங்கத்தின் இந்த சலுகைத் திட்டம், நாட்டின் வளங்களை சுரண்டியவர்கள், சுதந்திரமாக இருப்பதற்கு வழங்கக்கூடிய ஒரு கடவுச்சீட்டாக மாறிவிடக்கூடாது.

எனவே இந்த சலுகைத் திட்டத்தை அமல்படுத்ததற்கு முன்னதாக இது தொடர்பாக வெள்ளை அறிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது

Related News

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு