கடந்த வாரம் பத்துகேவ்ஸ், பன்ட்சாபூரி லக்சமனா ஜெயா அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் வீட்டிற்கு செல்வதற்கு லிப்டில் ஏறுவதற்கு முற்பட்ட கணவன், மனைவி மீது எரித் திரவக வீச்சு தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் 60 வயது மூதாட்டி, இன்று செலாாயங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார். முக்காடு அணிந்திருந்த அந்த மூதாட்டி, போலீசாரார் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, இடைவிடாமல் அழுது கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது.
அந்த முதாட்டி குற்றவியல் சட்டம் 324 ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் நோர் அரிஃப்ஃபின் முஹமாட் நாசிர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மூதாட்டியினால் எரித்திரவக வீச்சுக்குக்கு ஆளான 60 வயது மாதுவும் அவரின் பாகிஸ்தானிய கணவரும் முகத்தில் கடும் தீக்காயங்களுடன் தற்போது செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் அந்த தம்பதியரின் 14 வயது மகன்,எரித் திரவக வீச்சிலிருந்து தப்பியுள்ளான்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


