ஈப்போ,ஜாலான் குவாலா கங்சார், குனோங் லங் பெட்ரோனாஸ் எண்ணெய் நிலையத்திற்கு அருகில் சாலையில் படுத்துக்கொண்டு, கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியில் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் இச்செயலில் ஈடுபட்ட அந்த ஆடவர் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரம் குறித்து துல்லியமாக உறுதிப்படுத்த இயலவில்லை என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் யஹாயா ஹாஸ்ஸன் தெரிவித்தார். அந்த ஆடவரின் செயல் தொடர்பாக போலீஸ் புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டம் 283 பிரிவின் கீழ் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


