Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பிடிபட்ட டத்தோ மற்றும் அவரின் சகாக்களிடமிருந்து 3 கோடியே 80 லட்சம் வெள்ளி ரொக்கப் பணம் 200 கிலோ தங்கம் 17 ஆடம்பரக் கார்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

பிடிபட்ட டத்தோ மற்றும் அவரின் சகாக்களிடமிருந்து 3 கோடியே 80 லட்சம் வெள்ளி ரொக்கப் பணம் 200 கிலோ தங்கம் 17 ஆடம்பரக் கார்கள் பறிமுதல்

Share:

சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சிக்கியுள்ள தொழில் அதிபர்களில் டத்தோ அந்தஸ்தை கொண்ட ஒரு தொழில் அதிபர் மற்றும் அவரின் சகாக்களிடமிருந்து 3 கோடியோ 80 லட்சம் வெள்ளி ரொக்கப்பணம், 6 கோடி வெள்ளி மதிப்புள்ள 200 கிலோ தங்கம் மற்றும் 17 ஆடம்பர கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திரைப்படங்களை விநியோகிக்கும் டத்தோ அந்தஸ்தை கொண்ட ஒரு தொழில் அதிபர், இந்தியாவிலிருந்து கலைஞர்களை வரவழைத்து கலை நிகழ்ச்சிகளை படைக்கும் ஒரு தொழில் அதிபர், ஒரு தமிழ்ப்பத்திரிகை முதலாளி, சிரம்பானை சேர்ந்த ஒரு வர்த்தகரும், அரசியல்வாதியுமான ஒரு தொழில் அதிபர் ஆகியோரை நேற்று முன் தினம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் கைது செய்தது.

எஸ்.பி.ஆர்.எம் தலைமையில் ஓ.பி.எஸ் 82s என்ற பெயரில் மலேசிய அமலாக்க ஏஜென்சியின் பணிப்பிரிவு,இந்த கைது நடவடிக்கையையும், பொருட்கள் பறிமுதலையும் மேற்கொண்டது. நேற்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் 34 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் வாயிலாக ரொக்கப்பணம், நகைகள் மற்றும் விலை உயர்ந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கைது நடவடிக்கையில் 315 அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டனர்.

பல லட்சம் வெள்ளி மதிப்புள்ள ஆடம்பர கார்களை வாங்குவதில் வேட்கை கொண்ட இந்த தொழில் அதிபர்களிடமிருந்து மசெராட்டி, ஃபெராரி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் என விலை உயர்ந்த 17 ஆம்பர கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட தொழில் அதிபர்கள் கைது, அவர்களிடமிருந்து ரொக்கப்பணம், தங்கம் மற்றும் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதை எஸ்.பி.ஆர்.எம் மின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ ஆசம் பாக்கிஉறுதிபடுத்தினார்.

சட்டவிரோதப் பண மாற்றம் பயங்கரவாத நிதி அளிப்பு, சட்டவிரோத நடவடிக்கைகளின் வாயிலாக பணம் ஈட்டுதல் ஆகியவற்றை தடுக்கும் 2001 ஆம் ஆண்டு அம்லா சட்டத்தின் கீழ் இந்த தொழில் அதிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்