கோலாலம்பூர்,ஜன.9
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட துபாய் நகர்வு தொடர்பில் அரசியல் கட்சிகளிடமிருந்து 43 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் ஹுசெயின் தெரிவித்தார்.
இது தொடர்பாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை அறிக்கையை திறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஜனநாயக நாடாளுமன்ற முறையை சீர்குலைப்பதற்கு மேற்கொள்ளப்படும் கீழறுப்பு நடவடிக்கையான குற்றவியல் சட்டம் 124 சி பிரிவின் கீழ் இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.








