வணிகர்கள், தாங்கள் விற்பனை செய்கின்ற பொருட்களின் விலைப்பட்டியலை கட்டாயமாக காட்சிக்கு வைக்க வேண்டும் என்று ஓர் கடுமையான உத்தரவை பிறப்பிக்குமாறு உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரப்பிரிவு அமைச்சை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
விலைப்பட்டியலை கட்டாயமாக காட்சிக்கு வைக்க வேண்டும் என்று 1973 ஆம் ஆண்டு விலைகட்டுப்பாட்டு சட்டத்தின் 8 ஆவது விதி, வணிகர்களுக்கு வலியுறுத்துகிறது. .
அந்த கடும் சட்ட விதியை அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் கட்டாயமாக பயன்படுத்துவது மூலம் விலையேற்றத்தை தடுக்க முடியும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மொஹிதீன் அப்துல் காதர் வலியுறுத்தியுள்ளார்.
பினாங்கு மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் பெரும்பாலான வணிகர்கள், தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலையை காட்சிக்கு வைப்பதில்லை என்பது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஈரச் சந்தைகள் மட்டுமின்றி, உணகங்களிலும் மளிகைக்கடைகளிலும் இரவுச்சந்தை- மிலும் இந்த அவலநிலை தொடர்வதாக மொஹிதீன் அப்துல் காதர் சுட்டிக்காட்னார்.








