Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்

Share:

ஈப்போவில் அமைய விருக்கும்நியூரோ ரோபாட்டிக்ஸ் மற்றும் சைபர்னிக்ஸ் மறுவாழ்வு மையம் திட்டத்திற்கான செலவினம் திடீரென்று கூடுதலாக 15 கோடியே 40 லட்சம் வெள்ளி அதிகரித்திருப்பது குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டுமென்று ஈப்போ பாராட் எம்.பி. எம். குலசேகரன் கேட்டுக்கொண்டார்.

சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவினால் மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டம், ஈப்போவில் அமைய விருக்கிறது.

இத்திட்டம் தொடர்பான குத்தகை நிறுவனம் ஒன்றுக்கு நேரடியாக வழங்கப்பட்டிருப்பது, செலவினத்தைக் குறைக்க வல்லதாகும் என்று கூறப்படுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மனித வள அமைச்சருமான குலசேகரன் குறிப்பிட்டார்.

விபத்துகளில் சிக்கிய தொழிலாளர்கள் மற்றும் தனி நபர்கள் ஆகியோர் தங்கள் உடலில் ஏற்பட்டுள்ள உபாதைகளுக்கு சிகிச்சை அளித்து அவர்கள் வேலைக்குத் திரும்புவதற்கு தயார் படுத்தும் சொக்சோவின் முதன்மை திட்டம் தான் இந்த மறுவாழ்வு மையமாகும்.

இத்திட்டத்தை 50 கோடி வெள்ளி செலவில் நிர்மாணிக்க பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் குத்தகை வழங்கியிருந்த வேளையில், அத்திட்டம் திடீரென்று 65 கோடியே 40 லட்ச வெள்ளியாக உயர்ந்திருப்பது ஏன்? என்று குலசேகரன் வினவினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு