Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சபாவிற்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை
தற்போதைய செய்திகள்

சபாவிற்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவை

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.19-

வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சபாவிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இயற்கைச் சீற்றத்தினால் உயிர்ச் சேதம், பொருள் சேதம், அண்மைய நிலச்சரிவு பாதிப்புகள் முதலியவற்றினால் சபா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சபாவிற்குக் கூடுதலாக 10 மில்லியன் நிதி ஒதுக்கீடு உட்பட மத்திய அரசாங்கத்தின் அனைத்து கேந்திரங்களும் சபாவிற்கு உதவிட தங்கள் பலத்தை ஒருங்கிணைத்து, ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

சபாவில் நிலச்சரிவு நிகழ்ந்த பெனம்பாங் மற்றும் கோத்தா கினபாலு ஆகியவற்றின் சில பகுதிகளை இன்று நேரடியாகக் களம் இறங்கி பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து