Oct 22, 2025
Thisaigal NewsYouTube
பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: 14 வயது மாணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: 14 வயது மாணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது

Share:

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.22-

பண்டார் உத்தாமா பள்ளியில் மாணவி யாப் ஷிங் ஸுயேனைக் கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் 14 வயது மாணவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை, நீதிபதி அமீரா சரியாத்தி ஸைனால் முன்னிலையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, அதனை ஒப்புக் கொள்வதாக அம்மாணவர் தலையசைத்தார்.

கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி காலை 9 மணியளவில், பள்ளியின் பெண்கள் கழிப்பறையில், 16 வயது மாணவியைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கொலை குற்றத்திற்காக, தண்டனைச் சட்டம் பிரிவு 302 -இன் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குழந்தைகள் சட்டம் 2001 இன் படி, இவ்வழக்கு ஒரு மைனர் சம்பந்தப்பட்டது என்பதால், வழக்கு விசாரணைகள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்தப்பட்டன.

Related News

பறிமுதலைத் தவிர்க்க லாரியைத் தீ வைத்துக் கொளுத்திய உரிமையாளர்!

பறிமுதலைத் தவிர்க்க லாரியைத் தீ வைத்துக் கொளுத்திய உரிமையாளர்!

தொலைத் தொடர்புச் சேவையைச் சீர்குலைத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டுகள்: RM300,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு!

தொலைத் தொடர்புச் சேவையைச் சீர்குலைத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டுகள்: RM300,000 அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு!

பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டம்: 'அதிகக் கண்காணிப்பு' தேவைப்படும் பள்ளிகளைக் கண்டறியும் காவற்படை!

பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டம்: 'அதிகக் கண்காணிப்பு' தேவைப்படும் பள்ளிகளைக் கண்டறியும் காவற்படை!

எஸ்பிஎம் முடிவுகள் நிலைத்தன்மை: யுபிஎஸ்ஆர், பிடி3 நீக்கப்பட்டாலும் தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பில்லை!

எஸ்பிஎம் முடிவுகள் நிலைத்தன்மை: யுபிஎஸ்ஆர், பிடி3 நீக்கப்பட்டாலும் தேர்ச்சி விகிதத்தில் பாதிப்பில்லை!

பணத்தை மாற்ற வந்து வழிப்பறி: RM400 திருடிய ஈரானியருக்கு RM1,500 அபராதம்!

பணத்தை மாற்ற வந்து வழிப்பறி: RM400 திருடிய ஈரானியருக்கு RM1,500 அபராதம்!

கோலாலம்பூரில் கனமழை: மரம் விழுந்து 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் பலி, பெண் காயம்!

கோலாலம்பூரில் கனமழை: மரம் விழுந்து 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் பலி, பெண் காயம்!