May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சிறு படகின் மூலம் நாட்டிற்குள் நுழையும் கும்பல்

Share:

ஜோகூர்பாரு, ஜன.16-


உயிர் இடரையும் பொருட்படுத்தாமல், சிறு படகின் மூலம் கடல் அலைகள் மீது பயணம் செய்து, நாட்டிற்குள் நுழையும் அந்நிய நாட்டவர்களின் தந்திர செயல் அம்பலமாகியிருப்பதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ எம்.குமார் தெரிவித்துள்ளார்.

ஜோகூர், தஞ்சோங் குபாங்கை தளமாக கொண்டு, தரையிறங்கி வந்த அந்த கும்பலை, ஓப் தாரிங கெலோரா சோதனை நடவடிக்கையின் மூலம் கடந்த திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் முறியடிக்கப்பட்டதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

தஞ்சோங் குபாங், தஞ்சோங் அடாங் கடற்பகுதியை நோக்கி சிறுபடகில் வந்து கொண்டிருந்த அந்தக் கும்பலைச் சேர்ந்த 10 ஆண்களையும், 5 பெண்களையும் கடற்போலீசார் கைது செய்தனர்.

இவர்களை கொண்டு வருவதற்கு இந்தோனேசியாவை தளமாக கொண்டு, இரண்டு படகோட்டிகள், ஒவ்வொரிடமும் தலா ஆயிரம் வெள்ளியை கட்டணமாக வசூல் செய்து இருக்கின்றனர்.

கடற்போலீசாரின் கண்களை மறைப்பதற்கு மிக தந்திரமாக சிறு படகின் மூலம் பயணம் செய்து ஜோகூர் கடற்பகுதியில் தரையிறங்க அவர்கள் முயற்சி செய்து இருப்பதாக டத்தோ குமார் மேலும் கூறினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்