Mar 25, 2026
Thisaigal NewsYouTube
பொதுத் தேர்தலில் ஒத்துழைக்க பிரதமரை சந்திக்க அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆர்வம்
தற்போதைய செய்திகள்

பொதுத் தேர்தலில் ஒத்துழைக்க பிரதமரை சந்திக்க அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆர்வம்

Share:

ஜூலை 27-

வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் ஒத்துழைப்பு கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும் தம்மையும் சந்திப்பதற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் விரும்புவதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று அம்பலப்படுத்தியுள்ளார்.

எந்த கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள், இத்தகைய சந்திப்பை நடத்துதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளனர் என்பதை ஜாஹிட் வெளியிடவில்லை என்ற போதிலும் அக்கட்சிகளின் பிரதிநிதிகள் விடுத்துள்ள கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பாரிசான் நேஷனல் தலைவருமான ஜாஹிட் குறிப்பிட்டார்.

அந்த கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு இன்னும் மனம் திறக்கப்படவில்லை. எனவே சந்திப்பதற்கு அவர்கள் கேட்டிருந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் அம்னோவின் Tebrau தொகுதி பேராளர்களை சந்திக்கும் நிகழ்வில் போது அகமட் ஜாஹிட் இதனை தெரிவித்தார்.

Related News