கோலா திரங்கானு, பிப்ரவரி.24-
திரங்கானு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹனாஃபியா மாட்-க்கு எதிராக கோலா திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று இரண்டு அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அம்மாநிலத்தின் உள்கட்டமைப்பு, பயன்பாடுகள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறையை மேற்பார்வையிடும் சுக்காய் சட்டமன்ற உறுப்பினருமான ஹனாஃபியா, தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
மாநில அரசுக்குச் சொந்தமான இரண்டு துணை நிறுவனங்களில் தனது இரண்டு பிள்ளைகளை பதவிகளில் அமர்த்த உத்தரவிட்டதன் மூலம், அந்நிறுவனங்களின் உயர்மட்டக் குழுவில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் அவர், தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இக்குற்றங்களானது கடந்த 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்ததாகவும் கூறப்படுகின்றது.








