தம்முடைய அனைத்துலக கடப்பிதழ், எவ்வித நிபந்தனையின்றி தம்மிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தொடுத்துள்ள வழக்கு மீதான விசாரணை வரும் நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தேதி நிர்ணயித்தது.
முன்னாள் பிரதமருமான முகைதீனின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று பிராசிகியூஷன் தரப்பு செய்து கொண்ட ஆட்சேபத்தை தொடர்ந்து இம்மனு மீதான வழக்கு விசாரணைக்கான தேதியை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸுரா அல்வி நிர்ணயித்தார்.








