May 5, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் டிண்டிங்கில் விபரீதம்: 'ஸ்பைடர்மேன்' உடையில் மலையேறிய நபர் 20 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து படுகாயம்
தற்போதைய செய்திகள்

புக்கிட் டிண்டிங்கில் விபரீதம்: 'ஸ்பைடர்மேன்' உடையில் மலையேறிய நபர் 20 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து படுகாயம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.31-

கோலாலம்பூர் புக்கிட் டிண்டிங்கில் 75 டிகிரி சரிவான பகுதியில் சுமார் 20 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்த 'ஸ்பைடர்மேன்' உடை அணிந்த இளைஞர் ஒருவர் , பொது பாதுகாப்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார்.

சவாலான நிலப்பரப்பில் சுமார் 1 கிலோமீட்டர் மலையேறி, முதலுதவிக்கு பின் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

நேற்று வெள்ளிக்கிமை சுமார் 20 மீட்டர் உயரத்திலிருந்து 75 டிகிரி சரிவான பகுதியில் விழுந்த அந்த நபரை மீட்கும் பணி சவாலானதாக அமைந்தது. மீட்புக் குழுவினர் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் பயணித்து, பின்னர் தடம் இல்லாத அடர்ந்த பகுதியில் மேலும் 70 மீட்டர் தூரம் சென்று அவரை அடைந்தனர்.

கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மாலை 5.54 மணியளவில் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டு, காயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்