May 5, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் பதவிக்கு 10 ஆண்டுகள் மட்டுமே கால வரம்பு:  அமைச்சரவை அதிரடி முடிவு - நாடாளுமன்றத்தில் விரைவில் சட்டத்திருத்தம்
தற்போதைய செய்திகள்

பிரதமர் பதவிக்கு 10 ஆண்டுகள் மட்டுமே கால வரம்பு: அமைச்சரவை அதிரடி முடிவு - நாடாளுமன்றத்தில் விரைவில் சட்டத்திருத்தம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.31-

பிரதமர் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்த எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும் என்று சட்டத் திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இதற்கான சட்டத்திருத்தங்கள் தாக்கல் செய்யப்படும் என்றும், பொதுமக்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுப்பதற்கு முன்னதாக, அரசாங்கம் பொதுமக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தியது. இதில் பங்கேற்ற 3,722 பேரில், சுமார் 89.9 சதவீதத்தினர் பிரதமர் பதவிக்கு கால வரம்பு நிர்ணயிப்பதை ஒருமனதாக ஆதரித்துள்ளனர் என்று அவர் விளக்கினார்.

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், அதிகாரக் குவிப்பைத் தவிர்க்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த முக்கிய சட்டத் திருத்தம், நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத் தொடரிலேயே சமர்ப்பிக்கப்படும் என்று அஸாலினா தெரிவித்தார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

பிரதமர் பதவிக்கு 10 ஆண்டுகள் மட்டுமே கால வரம்பு: அமைச்சர... | Thisaigal News