Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பத்து ஃபெரிங்கியில் காணாமல் போன இரு மலையேறிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

பத்து ஃபெரிங்கியில் காணாமல் போன இரு மலையேறிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.27-

பினாங்கு, பத்து ஃபெரிங்கியில் உள்ள ஃபிரிடம் ஹீல் மலைப்பகுதியின் அருகில் உள்ள ஹப்பி ரோக் காட்டுப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஓர் ஆணும் ஒரு பெண்ணும் நேற்று மாலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த தம்பதியரான 44 வயது பெட்ரிக் பிலிப் சுங் மற்றும் 45 வயது பெர்ரிசியா வோங் ஆகியோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்று பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

அந்த ஆஸ்திரேலிய தம்பதியர் நேற்று வெள்ளிக்கிழமை அந்த மலைப்பகுதியில் ஏறிய போது, வழி தவறிவிட்டனர் என்று அவர்கள் வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொண்ட இடத்தை அடிப்படையாகக் கொண்டு தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக ஜோன் சகூன் குறிப்பிட்டார்.

மாலை 6.41 மணியளவில் அந்தத் தம்பதியர் கண்டுபிடிக்கப்பட்டு, மலையடி வாரத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டனர் என்று அவர் மேலும் விளக்கினார்.

Related News

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்