Dec 5, 2025
Thisaigal NewsYouTube
இல்லத்தரசி விஜயலெட்சுமி விபத்திற்கான சொக்சோ இழப்பீட்டைப் பெற்றார்
தற்போதைய செய்திகள்

இல்லத்தரசி விஜயலெட்சுமி விபத்திற்கான சொக்சோ இழப்பீட்டைப் பெற்றார்

Share:

புக்கிட் மெர்தாஜாம், ஜூலை.14-

சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவில் தன்னை ஒரு சந்தாதாரராகப் பதிவு செய்து கொண்டு, ஓராண்டு கூட ஆகவில்லை. இந்நிலையில் விபத்துக்குள்ளாகியிருக்கும் தமக்கு சொக்சோவிலிருந்து 13 ஆயிரம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகை அனுகூலமாகக் கிடைத்து இருப்பது இல்லத்தரசி எஸ். விஜயலெட்சுமியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சொக்கோவின் சொந்தத் தொழில் பாதுகாப்புத் திட்டமான ஸ்கிம் கெசெலாமாத்தான் சோசியால் பெகெர்ஜாஆன் செண்டிரி வாயிலாக இப்படியொருத் தொகை தமக்குக் கிடைக்கும் என்பது தாம் எதிர்பார்க்காததாகும் என்று வியப்புடன் கூறுகிறார் 40 வயது விஜயலெட்சுமி.

தமது கணவருடன் விபத்துக்கு இலக்காகிய விஜயலெட்சுமிக்கு இடுப்பு மற்றும் முழங்கால்களில் காயங்கள் ஏற்பட்டன.

இந்த விபத்தினால் மூன்று மாதங்களாக வேலை செய்ய முடியாமல் விஜயலெட்சுமி வருமானத்தை இழந்தார்.

இது போன்ற விபத்துக்கு சொக்கோவிடம் இழப்பீடு கோர முடியும் என்று தங்கள் குடியிருப்புப் பகுதி நடவடிக்கைக் குழுவின் மூலம் தனது தாயாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே மேல் விபரங்களை அறிய சொக்சோ அலுவலகத்திற்குத் தாம் சென்றதாக விஜயலெட்சுமி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சொக்சோ ஏற்பாட்டில் பினாங்கு, செபராங் பிறை மாநகர் மன்றத்தில் நடைபெற்ற சொந்த தொழில் புரிபவர்களுக்கான சந்தாதாரர் பதிவில் மூவாயிரம் பேர் தங்களைப் பதிவு செய்து கொண்டனர். அவர்களில் விஜயலெட்சுமியும் ஒருவராவார் என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

புக்கிட் மெர்தாஜாம், மாச்சாங் பூபோக்கில் உள்ள விஜயலெட்சுமியின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்ற அமைச்சர் ஸ்டீவன் சிம், சொக்சோ இழப்பீட்டுத் தொகைக்கானக் காசோலையை ஒப்படைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

அங்காடி வியாபாரம் நடத்தி வந்த விஜயலெட்சுமியும், அவரின் குடும்பத்தினரும் தங்களின் ஜீவியத்திற்குக் கிடைத்து வந்த அன்றாட வருமானத்தை இழந்த நிலையில் அவர்களுக்குக் கைக்கொடுத்தது சொக்சோவின் ஸ்கிம் கெசெலாமாத்தான் சோசியால் பெகெர்ஜாஆன் செண்டிரி திட்டமாகும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

இல்லத்தரசி விஜயலெட்சுமி விபத்திற்கான சொக்சோ இழப்பீட்டைப் ... | Thisaigal News