டிச. 15-
வங்சா மாஜூ டோல் சாவடி அருகே SPE எனப்படும் Setiawangsa-Pantai விரைவுச் சாசலையின் 18வது கிலோமீட்டரில் இன்று ஒரு Mercedes Benz கார் தீப்பிடித்த சம்பவத்தில் அதனை ஓட்டி வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து தகவல் அளித்த கோலாலம்பூர் தீயணைப்பு மீட்புப் படையைச் சார்ந்த Nor Saiful Ibrahim கூறுகயில், இன்று பிற்பகல் 1.38 மணிக்கு இந்த சம்பவம் குறித்து அழைப்பு பெற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்து, தீப்பிடித்திருப்ந்த கார் பிற்பகல் 2 . 15 மணி வாக்கில் முழுமையாக அணைக்கப்பட்டது அந்தக் கார் முழுமையாக சேதமடைந்தாலும், யாரும் காயமடையவில்லை என்றும் தீயின் காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் Nor Saiful Ibrahim கூறினார்.








