Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஜஸ்லிண்டாவைத் தேடும் பணிகள் தீவிரம் - வனவிலங்கு கேமராவில் பதிவான தடயம் சிக்கியது
தற்போதைய செய்திகள்

ஜஸ்லிண்டாவைத் தேடும் பணிகள் தீவிரம் - வனவிலங்கு கேமராவில் பதிவான தடயம் சிக்கியது

Share:

ஈப்போ, மே.31-

பேராக் மாநிலத்தைச் சேர்ந்த குனுங் பத்து பூத்தே மலைப் பகுதியில், கடந்த மே 24-ஆம் தேதி, மாயமான 49 வயதான ஜஸ்லிண்டா சலுடினைத் தேடும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை 10 மணி நிலவரப்படி, 21 மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த 13 பேர், வனத்துறையைச் சேர்ந்த 3 பேர் மற்றும் பேராக் வனத்துறை மலை வழிகாட்டிகள் 5 பேர் அடங்கியுள்ளதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் டத்தோ சயானி சைடோன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மீட்புக் குழு தற்போது பள்ளத்தாக்குப் பகுதியில் இருப்பதால், அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வனவிலங்கு கண்காணிப்புக் கேமரா ஒன்றிலும் ஜஸ்லிண்டா பதிவாகியுள்ளதால், மீட்புக் குழுவினர் அதன் அடிப்படையில் அடுத்தக் கட்டத் தேடுதல் பணியில் இறங்கியுள்ளனர்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு