சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் மூத்த அமைச்சர் 66 வயது தர்மன் சண்முகரத்னம், அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் 75 வயது ஙா கோக் சோங் மற்றும் என்.தி.யு.சி இன்காம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி 75 வயது டான் கின் லியான்ஆகியோர் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடுவது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மூவரும் இன்று செவ்வாய்க்கிழமை தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். தேர்தல் அதிகாரி டான் மெங் டுய் பிற்பகல் 12.39 மணிக்கு அம்மூவரையும் வேட்பாளர்களாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் முதல் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சிங்கப்பூருக்கு பொது விடுமுறையாகும்.
தற்போதைய சிங்கப்பூர் அதிபர் ஹலிமா பிந்தி யாக்கோப் பின் 6 ஆண்டு கால பதவி காலம் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தற்போது சிங்கப்பூரில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


