Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி

Share:

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் மூத்த அமைச்சர் 66 வயது தர்மன் சண்முகரத்னம், அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் 75 வயது ஙா கோக் சோங் மற்றும் என்.தி.யு.சி இன்காம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி 75 வயது டான் கின் லியான்ஆகியோர் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடுவது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் மூவரும் இன்று செவ்வாய்க்கிழமை தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். தேர்தல் அதிகாரி டான் மெங் டுய் பிற்பகல் 12.39 மணிக்கு அம்மூவரையும் வேட்பாளர்களாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் முதல் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சிங்கப்பூருக்கு பொது விடுமுறையாகும்.

தற்போதைய சிங்கப்பூர் அதிபர் ஹலிமா பிந்தி யாக்கோப் பின் 6 ஆண்டு கால பதவி காலம் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தற்போது சிங்கப்பூரில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது