May 28, 2026
Thisaigal NewsYouTube
5 நாளாக விசாரணைக்கு ஆளாகினார் இஸ்மாயில் சப்ரி
தற்போதைய செய்திகள்

5 நாளாக விசாரணைக்கு ஆளாகினார் இஸ்மாயில் சப்ரி

Share:

புத்ராஜெயா, மார்ச்.19-

லஞ்ச ஊழல் மற்றும் சட்டவிரோத பண மாற்றம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இன்று புதன்கிழமை ஐந்தாவது நாளாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.

காலை 9.57 மணிக்கு இஸ்மாயில் சப்ரி, புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு வந்தார். நேற்று செவ்வாய்க்கிழமையும், அவர் விசாரணைக்கு ஆஜராகியிருக்க வேண்டும். எனினும் அவர் ஏன் நேற்றைய விசாரணையில் ஆஜராகவில்லை என்று எஸ்பிஆர்எம் தெளிவுபடுத்தவில்லை.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற இஸ்மாயில் சப்ரி, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 14 மாதங்கள் நாட்டை வழிநடத்தி வந்தார்.

தாம் பிரதமராக இருந்த போது இஸ்மாயில் சப்ரி முன்னெடுத்த மலேசிய குடும்பம் என்ற பிரச்சாரத்திற்கு செலவிடப்பட்ட பெரும் தொகை, தன்னுடைய கணக்கிற்கு மடைமாற்றம் செய்து கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையிலும், ஒரு வீட்டில் 177 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது தொடர்பிலும் அவர் எஸ்பிஆர்எம்மினால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு