தனது ஒன்பது வயது சகோதரனின் கழுத்தை நெரித்து கொன்றதாக 14 வயது சிறுவன் ஒருவன்,மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டான்.
அச்சிறுவன், மலாக்கா, கம்போங் புக்கிட் பியாத்துவில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த சிறுவனிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
மாஜிஸ்திரேட் ஷர்டா ஷின்ஹா சுலைமான் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கு, மலாக்கா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


