Jan 21, 2026
Thisaigal NewsYouTube
கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி
தற்போதைய செய்திகள்

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

Share:

புத்ராஜெயா, ஜனவரி.21-

ஈப்போவில் பிறந்து 24 ஆண்டுகளாக குடியுரிமைக்காகப் போராடி வரும் ஹரிதரன் முகுந்தன், கால்பந்து வீரர்களுக்கு எளிதாகக் குடியுரிமை வழங்கப்படும் நிலையில் தனக்கு ஏன் மறுக்கப்படுகிறது என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மலேசியத் தந்தைக்கும் தாய்லாந்து தாய்க்கும் பிறந்த இவருக்கு, ஒரு வயதில் மலேசியக் கடப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, அவரது பிறப்புச் சான்றிதழில் அவர் மலேசியர் அல்ல என்று குறிப்பிடப்பட்டிருப்பது தெரிய வந்தது. மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்த போதிலும், அடையாள அட்டையான மைகாட் இல்லாததால் உயர்கல்வி கடன் பெறுவதிலும், தனது திருமணத்தைப் பதிவு செய்வதிலும் அவர் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்.

இவ்வழக்கில் ஹரிதரன் தரப்பு வழக்கறிஞர் ஆர். ரேணுகா ராமையா வாதிடுகையில், மலேசியாவுடன் எந்த வரலாற்றுத் தொடர்பும் இல்லாத வெளிநாட்டு கால்பந்து வீரர்களுக்கு ‘ஹரிமாவ் மலாயா’ அணியில் விளையாடுவதற்காக எளிதில் குடியுரிமை வழங்கப்படுவதைச் சுட்டிக் காட்டினார். மேலும், ஹரிதரனைப் போன்றே மலேசியத் தந்தைக்கும் வெளிநாட்டுத் தாய்க்கும் பிறந்த Nalvin Dhillon என்பவருக்கு நீதிமன்றம் மூலம் குடியுரிமை கிடைத்துள்ள நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் ஹரிதரனுக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த கூட்டரசு வழக்கறிஞர் Shahidah Nafisah Leman, ஹரிதரனுக்குக் கடப்பிதழ் வழங்கப்பட்ட காலத்தில் குடிநுழைவுத் துறை மற்றும் தேசியப் பதிவுத் துறையின் தரவுகள் ஒன்றிணைக்கப்படவில்லை என்றும், கடப்பிதழ் வைத்திருப்பது மட்டுமே ஒருவருக்குக் குடியுரிமை பெற்றுத் தந்துவிடாது என்றும் வாதிட்டார்.

மேலும், தாய்லாந்து சட்டப்படி ஹரிதரன், அந்த நாட்டு குடியுரிமையைப் பெற வாய்ப்புள்ளதாகவும் அரசு தரப்பு கூறியது. இருப்பினும், தான் பிறந்தது முதல் மலேசியாவை விட்டு வெளியேறியதில்லை என்றும், தனக்கு வேறு எந்த நாட்டு குடியுரிமையும் இல்லை என்றும் ஹரிதரன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

சீன மொழி நாளிதழின் தலைமை ஆசிரியர், துணை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை

சீன மொழி நாளிதழின் தலைமை ஆசிரியர், துணை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை