இந்தியாவின் வட மாநிலமான இமாச்சால பிரதேசத்தில் ஏற்பட்ட அடைமழை மற்றும் கடும் வெள்ளத்தைத் தொடர்ந்து மலேசியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளாமல் இருக்கும் 12 மலேசியர்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாக விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.
அந்த 12 மலேசியர்களுடன் தொடர்புகொள்ள அவர்களின் குடும்பத்தினர் முயற்சி செய்தும், அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் டில்லியில் உள்ள மலேசியத் தூதரகத்தின் வாயிலாக அந்த 12 மலேசியர்களை தேடும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த 12 பேரும் இமாச்சால பிரதேசத்தில் ஹம்ப்தா பாஸ் என்ற ஊரில் சாகசப் பயணத்தில் பங்கு கொள்ள சென்றதாக கூறப்படுகிறது.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


