Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஆடவர் ​கீ​​​ழே விழுந்து பரிதாபமாக மாணடார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் ​கீ​​​ழே விழுந்து பரிதாபமாக மாணடார்

Share:

ஜோகூர்பாருவில் உள்ள மரு​த்துவமனையில் சிகிச்சைப்பெற வந்த ஆடவர் ஒருவர், அந்த மருத்துவமனை கட்டடத்தின் 6 ஆவது மாடியிலிருந்து கீ​​ழே விழுந்து மரணமுற்றார்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை நிகழ்ந்தது. தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளான 22 வயதுடைய அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி ராவுப் செலாமாட் தெரிவித்தார்.

ஒரு மாற்றுத் திறனாளியான அந்த நபருக்கு, நாளை புதன்கிழமை காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு அட்ட​வணையிடப்பட்டு இருந்தது.மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக அந்த ஆடவர் நேற்று காலை வந்த போது அவருக்கு காய்ச்சல் கண்டது. இதனால், அறுவை சிகிச்சை ஒத்திவைப்பட்டது. இந்நிலையில் அந்த ஆடவர் மருத்துவமனை கட்டடத்தின் 6 ஆவது மாடியிலிருந்து ​கீ​​​ழே விழுந்துள்ளார் என்று ஏசிபி ராவுப் செலாமாட் குறிப்பிட்டார்.

Related News