Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பத்திரிகையாளர்களின் துயரம்: 10 ஆண்டு அனுபவத்திற்கு இரண்டாயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவான ஊதியமா? பிரதமர் அன்வாரின் புதிய உத்தரவு!
தற்போதைய செய்திகள்

பத்திரிகையாளர்களின் துயரம்: 10 ஆண்டு அனுபவத்திற்கு இரண்டாயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவான ஊதியமா? பிரதமர் அன்வாரின் புதிய உத்தரவு!

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.16-

மலேசிய ஊடகத்துறையில், 10 ஆண்டுகள் அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர்கள்கூட மாதந்தோறும் 2 ஆயிரத்திற்கும் குறைவாகச் சம்பளம் பெறுவது 'ஏற்கவே முடியாத அதிர்ச்சி' என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வேதனைத் தெரிவித்தார். இதனையடுத்து, ஊடக ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க, உள்ளூர் ஊடக நிறுவனங்கள் தங்களுக்கெனத் தனிப்பட்ட குறைந்தபட்ச ஊதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அவர் அதிரடியாக உத்தரவிட்டார். இந்த அநீதிக்குத் தீர்வு காண, அவர் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீலுடன் உடனடியாக ஆலோசித்து, அனைத்து ஊடக நிறுவனங்களுடனும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு ஆணையிட்டுள்ளார்.

முன்னதாக, அரசு சார்ந்த நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக மூவாயிரத்து நூறு ரிங்கிட்டாக நிர்ணயித்ததைக் குறிப்பிட்ட பிரதமர், ஊடகத் துறையின் சம்பள உயர்வுக்கு உதவும் வகையில் சலுகைகள் வழங்குவது பற்றியும் தீவிரமாகக் கருத்தில் கொள்வதாக நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஊதியப் பிரச்சினை சபா மாநிலத்திற்கு மட்டுமல்லாமல், மலேசியாவின் அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

பத்திரிகையாளர்களின் துயரம்: 10 ஆண்டு அனுபவத்திற்கு இரண்டா... | Thisaigal News