May 14, 2026
Thisaigal NewsYouTube
பத்திரிகையாளர்களின் துயரம்: 10 ஆண்டு அனுபவத்திற்கு இரண்டாயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவான ஊதியமா? பிரதமர் அன்வாரின் புதிய உத்தரவு!
தற்போதைய செய்திகள்

பத்திரிகையாளர்களின் துயரம்: 10 ஆண்டு அனுபவத்திற்கு இரண்டாயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவான ஊதியமா? பிரதமர் அன்வாரின் புதிய உத்தரவு!

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.16-

மலேசிய ஊடகத்துறையில், 10 ஆண்டுகள் அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர்கள்கூட மாதந்தோறும் 2 ஆயிரத்திற்கும் குறைவாகச் சம்பளம் பெறுவது 'ஏற்கவே முடியாத அதிர்ச்சி' என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வேதனைத் தெரிவித்தார். இதனையடுத்து, ஊடக ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க, உள்ளூர் ஊடக நிறுவனங்கள் தங்களுக்கெனத் தனிப்பட்ட குறைந்தபட்ச ஊதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அவர் அதிரடியாக உத்தரவிட்டார். இந்த அநீதிக்குத் தீர்வு காண, அவர் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீலுடன் உடனடியாக ஆலோசித்து, அனைத்து ஊடக நிறுவனங்களுடனும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு ஆணையிட்டுள்ளார்.

முன்னதாக, அரசு சார்ந்த நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக மூவாயிரத்து நூறு ரிங்கிட்டாக நிர்ணயித்ததைக் குறிப்பிட்ட பிரதமர், ஊடகத் துறையின் சம்பள உயர்வுக்கு உதவும் வகையில் சலுகைகள் வழங்குவது பற்றியும் தீவிரமாகக் கருத்தில் கொள்வதாக நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஊதியப் பிரச்சினை சபா மாநிலத்திற்கு மட்டுமல்லாமல், மலேசியாவின் அனைத்து ஊடக ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

Related News

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்

பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக அன்வாருக்கு கைரி ஜமாலுதீன் பாராட்டு

பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக அன்வாருக்கு கைரி ஜமாலுதீன் பாராட்டு

லங்காவி, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 14.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

லங்காவி, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 14.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு1.3 பில்லியன் டாலர்கள் வழங்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை / சிறப்பு சூழல் காரணமாக நஜிப்புக்கு சாதகமான தீர்ப்பு

எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு1.3 பில்லியன் டாலர்கள் வழங்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை / சிறப்பு சூழல் காரணமாக நஜிப்புக்கு சாதகமான தீர்ப்பு

எதிர்கட்சித் தலைவரை மாற்றும் கோரிக்கை: ஹம்சாவின் முடிவுக்குக் காத்திருப்பதாக சபாநாயகர் தகவல்

எதிர்கட்சித் தலைவரை மாற்றும் கோரிக்கை: ஹம்சாவின் முடிவுக்குக் காத்திருப்பதாக சபாநாயகர் தகவல்