பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 17-
பெட்டாலிங் ஜெயா, பன்டார் ஶ்ரீ டாமன்சாராவில் ஆடவர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடந்த சனிக்கிழமை, இரவு 11.00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்தார்.
பக்கத்து வீட்டில் பயங்கர அலறல் சத்தம் கெட்டதாக அண்டை வீட்டுக்காரர் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து போலிசார் சம்பவ இடத்தை நோக்கி விரைந்ததாக ஷாருல்நிஜாம் குறிப்பிட்டார்
20 முறை, கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த ஆடவர் ஆழமான வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஷாருல்நிஜாம் தெரிவித்தார்.









