Dec 20, 2025
Thisaigal NewsYouTube
வங்கிக் கண்ணாடியை உடைத்து ஆவேசமாக நடந்து கொண்ட ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

வங்கிக் கண்ணாடியை உடைத்து ஆவேசமாக நடந்து கொண்ட ஆடவர் கைது

Share:

கிள்ளான், டிசம்பர்.20-

கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கியில் ஒரு வங்கியின் கண்ணாடியை உடைத்து, ஆவேசமாக நடந்து கொண்ட நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இன்று மதியம், வங்கியின் முன்புறம், இந்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது. அங்கிருந்த சாட்சியங்களின்படி, அந்த ஆடவர் திடீரென வங்கியின் நுழைவு வாயில் கண்ணாடியைச் சுத்தியலைக் கொண்டு உடைத்துள்ளார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தென் மாவட்ட போலீசார், அந்த நபரைச் சமாதானப்படுத்த முயன்றனர். அவர் பணிய மறுத்ததுடன், போலீசாரையே தாக்க முயன்றதால், தற்காப்புக்காகப் போலீசார் சில எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரைக் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாத விரக்தியில் இவ்வாறு செய்ததாகத் தெரிகிறது. அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது போதைப்பொருள் உட்கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related News