Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

போலி மருத்துவச் சான்றிதழை வழங்கிய மருத்துவருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

கோலாலம்பூர், பிப்.25-

குழந்தை பிறப்பு தொடர்பில் தேசிய பதிவு இலாகாவிற்கு போலி மருத்துவச் சான்றிதழை வழங்கிய குற்றத்திற்காக மருத்துவர் ஒருவருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 2 ஆயிரம் அபராதம் விதித்தது.

83 வயது Arthur Varkey Samuel என்ற அந்த மருத்துவர், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறைத் தண்டனை விதிப்பதாக மாஜிஸ்திரேட் எஸ். மகேஸ்வரி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி இரவு 10 மணியளவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் மாது ஒருவர் குழந்தை பிரசவித்ததது போல் போலியான மருத்துவச் சான்றிதழைத் தயாரித்து கொடுத்து மோசடி புரிந்ததாக அந்த மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

மாது ஒருவருக்கு பிறக்காத குழந்தையை அந்த மாதுவிற்கு பிறந்ததைப் போல் போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்ததற்காக அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு