Mar 21, 2026
Thisaigal NewsYouTube
குவாந்தான் ஆசிரியரிடம் மோசடிக் கும்பல் கைவரிசை! 3 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்தார்!
தற்போதைய செய்திகள்

குவாந்தான் ஆசிரியரிடம் மோசடிக் கும்பல் கைவரிசை! 3 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்தார்!

Share:

குவாந்தான், செப்டம்பர்.18-

குவாந்தானில் 42 வயதான ஆசிரியர் ஒருவரிடம் காப்பீட்டு முகவர், காவல்துறை அதிகாரி மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் போல் நாடகமாடிய பண மோசடிக் கும்பல் அவரிடமிருந்து 3 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் திருடியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இச்சம்பவத்தின் போது, மர்ம நபர் ஒருவர் அந்த ஆசிரியரின் தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு, அவர் மீது பண மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக நாடகமாடியுள்ளார்.

மேலும், அவரை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க, பிணைத் தொகையும் கோரியுள்ளார்.

இந்நிலையில், அதனை நம்பிய அந்த ஆசியரியர், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையில், கிட்டத்தட்ட 13 முறை, பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 117,000 ரிங்கிட்டுகளைப் பரிமாற்றம் செய்துள்ளார்.

அதே வேளையில், 280,000 ரிங்கிட்டிற்கு வங்கிக் கடனையும், நகைகளையும் அடகு வைக்கவும் பண மோசடிக் கும்பல் அவரை மிரட்டியுள்ளது.

இந்நிலையில் அந்த ஆசிரியர் காவல்துறையை அணுகியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து