சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சிவப்பு நிறக் காரின் அருகே, நபர் ஒருவர் தரையில் படுத்து உறங்கும் வினோத வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வருகிறது.
'டேஷ்கேம் மலேசியா' பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், காரின் கதவுகள் திறந்த நிலையில் இருக்க, அந்த நபர் தார் சாலையை மெத்தை என நினைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் காண முடிகிறது. அவர் மதுபோதையில் இருந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவில்லை என்றாலும், இணையவாசிகள் இதனைப் பல்வேறு கோணங்களில் விமர்சித்து வருகின்றனர்.
"சாலையை மெத்தை என அவர் நினைத்துவிட்டார் போலிருக்கிறது; இந்த நேரத்தில் ஒரு மணல் லாரி வந்திருந்தால் என்னவாகியிருக்கும்?" எனப் பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், அவர் வாகனத்தை ஓட்டிச் சென்று மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிப்பதற்குப் பதிலாக, இப்படி ஓரமாகப் படுத்திருப்பதே மேல் என்று கிண்டலாகவும் ஆவேசமாகவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.








