கடந்த மாதம் வர்த்தக தளம் ஒன்றின் நுழையாவில் வேலி கதவின் தடுப்பை வேண்டுமென்றே மோதித் தள்ளி சேதம் விளைவித்ததாக தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர் ஒருவர் பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
27 வயது கே. விமல் என்ற அந்த பேருந்து ஓட்டுநர், மாஜிஸ்திரேட் ஷஹரில் அனுவார் அஹ்மத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. அந்த பேருந்து ஓட்டுநர் கடந்த ஜுலை 31 ஆம் தேதி காலை 11.15 மணியளவில் கிளானா ஜெயா, ஜெனித் கார்ப்பரேட் பார்க் நிறுவனத்திற்கு சொந்தமான தானியங்கி வேலி கதவின் தடுப்பை மோதி சேதப்படுத்தி சுமார் 5 ஆயிரம் வெள்ளி இழப்பை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தனக்கு எதிரான குற்றத்தை விமல் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் ஷஹரில் அனுவார் தெரிவித்தார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


