ஜோகூர்,ஆ௧ஸ்ட் 04-
JOHOR BAHRU, TAMAN BUKIT INDAH, PERSIARAN BUKIT INDAH சுற்றுவட்டப் பாதையில், வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உயிரிழந்தார்.
அதேசமயம், அவருடன் பயணித்த 31 வயதான அவரின் நண்பர் கடும் காயங்களுக்கு இலக்கானார்.
24 வயது உள்ளூர் ஆடவர் ஓட்டிச் சென்ற வாகனம் சுற்றுவட்டப் பாதையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால், இன்று பின்னிரவு 1.45 மணிக்கு அவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
அதோடு, அந்த வாகனம் அதீத வேகத்தில் அங்கிருந்த இரும்பு சாலை தடுப்பை மோதியதில், ஓட்டுநர் வாகனத்தில் வெளியே தூக்கியெறியப்பட்டு உயிரிழந்ததை, ISKANDAR PUTERI மாவட்ட போலிஸ் தலைவர் ASISTEN KOMISIONER M KUMARASAN உறுதிப்படுத்தியுள்ளார்.








