Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பெர்லீஸ், பாடாங் பெசாரில் தொடக்கப் பள்ளியில்  நிகழ்ந்த வெடிச் சம்பவம் தொடர்பில் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போதைய செய்திகள்

பெர்லீஸ், பாடாங் பெசாரில் தொடக்கப் பள்ளியில் நிகழ்ந்த வெடிச் சம்பவம் தொடர்பில் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Share:

பெர்லீஸ், பாடாங் பெசாரில் தொடக்கப் பள்ளி ஒன்றின் முன்புறம் நிகழ்ந்த வெடிச் சம்பவம் தொடர்பில் இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 42 மற்றும் 32 வயதுடைய அந்த இரு நபர்களும் போதைப் பொருள் உட்கொண்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக , பாடாங் பெசார் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமாட் ஷொக்ரி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 7.30 மணியளவில் நிகழ்ந்த இந்த வெடிச்சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. பள்ளியின் வேலியோரத்தில் நிகழ்ந்த இந்த வெடிச்சம்பவம் அப்பகுதியை உலுக்கியது.

Related News