Apr 2, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்துறை அலுவலகம் தவறு இழைத்து விட்டது
தற்போதைய செய்திகள்

சட்டத்துறை அலுவலகம் தவறு இழைத்து விட்டது

Share:

ஜன.4-

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் சட்டத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு நிகழ்ந்ததைத் தொடர்ந்து அதனை சரிப்படுத்துவதற்காகவே இஸ்தானா நெகாரா ஓர் அறிக்கை யை வெளியிட்டுள்ளது என்று வழக்கறிஞரும், சட்ட வல்லுநருமான முகமட் ஹனிப் கத்ரி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பொது மன்னிப்பு என்பது கைதிகளுக்கு வழங்குவதற்கு மாமன்னருக்கே உரிய பிரித்தியேக உரிமையாகும். அதனைதான் அரசியலமைப்புச் சட்டமும் வலியுறுத்துகிறது.

ஒரு கைதி பொது மன்னிப்பு கோரினால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் யாவை என்பதை இஸ்தானா நெகாரா மிகத் தெளிவாக தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.

ஆனால், சட்டத்துறை அலுவலகம் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் பெயரை பயன்படுத்தியது மூலம் மிகப்பெரிய தவற்றை இழைத்து விட்டது என்று ஹனிப் கத்ரி தெளிவுபடுத்தியுள்ளார்.

பொது மன்னிப்பு விவகாரத்தில் நஜீப் பெயரை சட்டத் துறை அலுவலகம் அறவே சம்பந்தப்படுத்தியிருக்கக்கூடாது. ஒரு கைதி, பொது மன்னிப்புக்கோரியானால் அடுத்து அவர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைதான் சட்டத்துறை அலுவலகம் விவரித்து இருக்க வேண்டுமே தவிர நஜீப் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கியிருக்கக்கூடாது என்று அந்த அந்த சட்ட வல்லநர் விளக்கியுள்ளார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்