Mar 11, 2026
Thisaigal NewsYouTube
நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள ஆலோசனை
தற்போதைய செய்திகள்

நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ள ஆலோசனை

Share:

துன் மகாதீர் முகமதுவிற்கும், துணைப் பிரதமர் அமாட் ஜாஹீட் ஹமிடிக்கும் இடையிலான மான நஷ்ட வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது.

தம்மை 'குட்டி' என்றும், தாம் மலாய்காரர் அல்லாத முஸ்லீம் என்றும் அமாட் ஜாஹிட் கூறியிருப்பது தொடர்பில், அவருக்கு எதிராக துன் மகாதீர் வழக்குத் தொடுத்துள்ள வேளையில், தாம் எதிர்நோக்கியுள்ள லஞ்ச ஊழல் வழக்கில், துணைப் பிரதமர் என்ற முறையில் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று கூறியுள்ள துன் மகாதீருக்கு எதிராக அமாட் ஜாஹிட்டும் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இவ்வழக்கு நீதிமன்ற துணைப்பதிவதிகாரி நூர் அஃபிடா இட்ரீஸ் முன்னிலையில் இன்று நடைபெற்ற போது இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related News