துன் மகாதீர் முகமதுவிற்கும், துணைப் பிரதமர் அமாட் ஜாஹீட் ஹமிடிக்கும் இடையிலான மான நஷ்ட வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே மத்தியஸ்தர் மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது.
தம்மை 'குட்டி' என்றும், தாம் மலாய்காரர் அல்லாத முஸ்லீம் என்றும் அமாட் ஜாஹிட் கூறியிருப்பது தொடர்பில், அவருக்கு எதிராக துன் மகாதீர் வழக்குத் தொடுத்துள்ள வேளையில், தாம் எதிர்நோக்கியுள்ள லஞ்ச ஊழல் வழக்கில், துணைப் பிரதமர் என்ற முறையில் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடும் என்று கூறியுள்ள துன் மகாதீருக்கு எதிராக அமாட் ஜாஹிட்டும் வழக்குத் தொடுத்துள்ளனர்.
இவ்வழக்கு நீதிமன்ற துணைப்பதிவதிகாரி நூர் அஃபிடா இட்ரீஸ் முன்னிலையில் இன்று நடைபெற்ற போது இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


