கோலாலம்பூர், நவம்பர் 04-
நாளை நவம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி, நவம்பர் 9 ஆம் தேதி சனிக்கிழமை வரை போக்குவரத்து தொடர்புடைய குறிப்பிட்ட சம்மன்களுக்கான அபராதங்களுக்கு 50 விழுக்காடு வரை கட்டண கழிவை போலீசார் வழங்கவிருக்கின்றனர்.
ரொக்கமில்லா கட்டண முறை வாயிலாக அபராதத்தொகையை கோலாலம்பூர், Tun HS Lee-யில் உள்ள போக்குவரத்து போலீஸ் முகப்பிடங்களில் செலுத்தலாம் என்று கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் பிரிவின் தலைவர் ACP Mohd Zamzuri Mohd Isa தெரிவித்துள்ளார்.








