பினாங்கு மாநிலம், பிறை பகுதியில், எஸ்எம்கே துன் ஹுசேன் ஓன் பள்ளி அருகே 1.5 மீட்டர் ஆழமுள்ள கால்வாயில் 37 வயது ஆடவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது.
சடலம் குறித்து போலீசாரிடமிருந்து தகவல் கிடைத்ததையடுத்து, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றதாக அதன் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் ஜோன் சகுன் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கால்வாயில் இருந்த சடலத்தை 5 தீயணைப்பு வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மீட்பு நடவடிக்கையானது, மதியம் 12.47 மணியளவில் நிறைவடைந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.








