அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பெஞின் ஓய்வூதிய முறை அகற்றப்பட வேண்டும் என்று மூடா கட்சியின் தலைவரும், மூவார் எம்.பி.யுமான சையத் சாதிக் அப்துல் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க ஊழியர்களைப் போல ஓய்வூதியம் வழங்கப்படுவதைக் காட்டியிலும் மற்றத் தொழிலாளர்களைப் போல அவர்களை தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று சையிட் சாடிக் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஓய்வூதிய முறை அகற்றப்படுவதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை தாம் முழுமையாக ஆதரிப்பதாக முன்னாள் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சருமான சையிட் சாடிக் குறிப்பிட்டார்.
இபிஎப் திட்டத்தில் பங்கு கொண்டுள்ள சாமானிய மக்கள், எத்தகைய சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர் , ஓர் அவசரத் தேவைக்கு அந்தப் பணத்தை எடுக்க முடியாமல் எத்தகைய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர், பண நெருக்கடி காலத்தில் அவர்கள் படுகின்ற துயரம் போன்றவற்றை அரசியல்வாதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் உணரும் வகையில் அவர்கள் அனைவரையும் EPF திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று சையிட் சாடிக் தமது வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய செய்திகள்
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பெஞின் ஓய்வூதிய முறை அகற்றப்பட வேண்டும்
Related News

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்


