அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பெஞின் ஓய்வூதிய முறை அகற்றப்பட வேண்டும் என்று மூடா கட்சியின் தலைவரும், மூவார் எம்.பி.யுமான சையத் சாதிக் அப்துல் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க ஊழியர்களைப் போல ஓய்வூதியம் வழங்கப்படுவதைக் காட்டியிலும் மற்றத் தொழிலாளர்களைப் போல அவர்களை தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று சையிட் சாடிக் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஓய்வூதிய முறை அகற்றப்படுவதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை தாம் முழுமையாக ஆதரிப்பதாக முன்னாள் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சருமான சையிட் சாடிக் குறிப்பிட்டார்.
இபிஎப் திட்டத்தில் பங்கு கொண்டுள்ள சாமானிய மக்கள், எத்தகைய சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர் , ஓர் அவசரத் தேவைக்கு அந்தப் பணத்தை எடுக்க முடியாமல் எத்தகைய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர், பண நெருக்கடி காலத்தில் அவர்கள் படுகின்ற துயரம் போன்றவற்றை அரசியல்வாதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் உணரும் வகையில் அவர்கள் அனைவரையும் EPF திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று சையிட் சாடிக் தமது வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய செய்திகள்
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பெஞின் ஓய்வூதிய முறை அகற்றப்பட வேண்டும்
Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


