Feb 7, 2026
Thisaigal NewsYouTube
சீனப்புத்தாண்டை முன்னிட்டு சுங்கக் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி: பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்ஸண்டர் நந்தா லிங்கி அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

சீனப்புத்தாண்டை முன்னிட்டு சுங்கக் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி: பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்ஸண்டர் நந்தா லிங்கி அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.07-

சீனப் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் அலெக்ஸண்டர் நந்தா லிங்கி இன்று சனிக்கிழமை அறிவித்தார்.

அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கையால், அரசாங்கத்திற்கு 19.5 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தள்ளுபடியானது வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி அதிகாலை 12.01 மணி முதல் அமலுக்கு வரும் நிலையில், பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடிவடைகின்றது.

அதே வேளையில், இச்சலுகையானது Class 1 தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், நாட்டின் எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளான Sultan Iskandar கட்டிடம் மற்றும் Tanjung Kupang டோல் சாவடிகளுக்கு இது பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புபவர்கள் மற்றும் ரமலான் மாதத்திற்கு முன்னதாகப் பயணம் செய்பவர்களின் பயணச் செலவுகளைக் குறைப்பதற்காக இந்த சலுகையானது வழங்கப்பட்டுள்ளதாக நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தேதிகளானது, அதிகப் பயண நாட்களின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதையும், நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்வுப் பகுதிகளில் கூடுதல் தளவாடங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நெடுஞ்சாலைப் பயனர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, MyPLUS-TTA செயலி மற்றும் LLM TuJu செயலி போன்ற பயணத் திட்டமிடல் கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நந்தா லிங்கி வலியுறுத்தியுள்ளார்.

Related News

சாகிர் நாயக் விவகாரம் குறித்து மலேசியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் - இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்

சாகிர் நாயக் விவகாரம் குறித்து மலேசியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் - இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்

ஜாலான் பேராக்கில் கிரேன் விபத்து: வங்கதேச ஆடவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்

ஜாலான் பேராக்கில் கிரேன் விபத்து: வங்கதேச ஆடவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு Garah பேரணிக்கு போலீஸ் தடை

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு Garah பேரணிக்கு போலீஸ் தடை

சட்டவிரோத ஆலயம்" என்ற சொல்லாடலை நிறுத்துங்கள்: வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக பேரணி நடத்துகின்றவர்கள் மீது சட்ட  நடவடிக்கை எடுப்பீர்: DAPSY தலைவர் வூ கா லியோங் வலியுறுத்தல்

சட்டவிரோத ஆலயம்" என்ற சொல்லாடலை நிறுத்துங்கள்: வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக பேரணி நடத்துகின்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பீர்: DAPSY தலைவர் வூ கா லியோங் வலியுறுத்தல்

மலேசிய கூட்டுப் படைகளின் தளபதியாக தெங்கு ஃபௌஸி இப்ராஹிம் நியமனம்

மலேசிய கூட்டுப் படைகளின் தளபதியாக தெங்கு ஃபௌஸி இப்ராஹிம் நியமனம்

சட்டவிரோத கோயில்களுக்கு எதிரான பேரணி தொடரும் - சர்ச்சைக்குரிய சமய பரப்புரையாளர் அறிவிப்பு

சட்டவிரோத கோயில்களுக்கு எதிரான பேரணி தொடரும் - சர்ச்சைக்குரிய சமய பரப்புரையாளர் அறிவிப்பு